×

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது.! பயணிகள் உற்சாகம்

சென்னை: சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை:சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி பாஸ்ட் லோக்கல் மின்சார ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும். வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா சாலை, சோளிங்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் இந்த ரயிலைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரயில்வே சமீபத்தில் அறிவித்தது. அதன்படி மே 2ம் தேதி முதல் வண்டி எண் 06033 சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று வேலூர் ரயில் நிலையத்துக்கு 9 மணி 35 நிமிடங்களுக்குச் சென்றடையும். அதன்பின், அங்கிருந்து பெண்ணத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12 மணி 5 நிமிடங்களுக்குச் செல்லும். திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேதாரம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு 5.40 மணிக்கு வந்து சேரும்.

அதனைத்தொடர்ந்து வேலூர் ரயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரயில் நிலையங்கள் வழியாக 9 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பு ரயில் சேவை மே 2ம் தேதி முதல் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது. பின்னர் நிர்வாக காரணங்களுக்காக இந்த ரயில் சேவை நீட்டிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் சென்னை கடற்கரை – திருவண்ணாமலை நீட்டிப்பு சேவை இன்று காலை தொடங்கியது. திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு ரயில் சேவை தொடங்கியது. ரயில் சேவை மீண்டும் தொடங்கியதால் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

The post சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது.! பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Chennai Beach ,Thiruvannamalai ,CHENNAI ,Tiruvannamalai ,Vellore Cantonment ,
× RELATED சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே...